பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாளக் கையெழுத்துப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் போராட்டம் யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இன்னொரு அடக்குமுறைச் சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசமைப்புக்காகப் போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.






Leave a comment