Home தென்னிலங்கைச் செய்திகள் பட்டதாரிகளை பணிக்கமர்த்த நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பட்டதாரிகளை பணிக்கமர்த்த நடவடிக்கை!

Share
Share

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதத்துக்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4 வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்று கல்வி, உயர்
கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நீதித்துறை நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் உடனடியாக வர்த்தமானி வெளியிடப்படும். இதன்மூலம் பட்டதாரிகள், ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

வேலையற்ற பட்டதாரிகள் கூட்டுசங்கத்தின் பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏற்கனவே, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி – தேவைக்கேற்ப ஏனைய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அத்துடன், ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை
திருத்துவதற்கும் வயது வரம்பை நீட்டிப்பதற்கும் தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களுக்கும் உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் இதன் போது இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உயர்தர மாணவர்களில் 24 சதவீதமானோருக்கு மன அழுத்தம்!

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு...

மிரட்டி கப்பம் பெற முயன்ற இருவருக்கு மட்டக்களப்பில் விளக்கமறியல்!

மட்டக்களப்பு புன்னைச்சோலை பகுதியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

நாட்டில் ஒரே நாளில் 4,539 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர்...

2026 இல் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் – லால் காந்த!

2026 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை அமைச்சர் லால் காந்த...