Home தென்னிலங்கைச் செய்திகள் நீதிமன்றம் செல்வதற்கு தயாராகவே உள்ளோம் என்கிறார் நாமல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

நீதிமன்றம் செல்வதற்கு தயாராகவே உள்ளோம் என்கிறார் நாமல்!

Share
Share

“எங்களுக்கு எதனையும் மறைக்க வேண்டிய தேவையில்லை. நீதிமன்றத்துக்குச் செல்வதற்கும் தயாராகவே உள்ளோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி காலத்தில்தான் சட்டத்தை வளைத்தார்கள் என்று நினைத்தோம். ஆனால், இந்த அரசு இன்னும் அதிகமாகச் சட்டத்தை வளைத்துக் கொண்டிருக்கின்றது போலத் தெரிகின்றது.

எங்களுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. நீதிமன்றத்துக்கு அழைத்தால் செல்வோம். பொலிஸாரோ , நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவோ, குற்றப் புலனாய்வுப் பிரிவோ எங்கென்றாலும் செல்வோம்.

ஆனால், இன்று பலர் இலங்கையிலேயே இல்லை. மத்திய வங்கி மோசடியை விசாரிக்க வந்த அரசு, இப்போது அவர்களை மீண்டும் அழைத்து வர ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றது. அந்த நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். எங்களுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. நியாயமான விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம.

அரசின் ஊடகப் பேச்சாளர் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போனால், 15 வருட பழைய விடயங்களை எடுத்துக்கொள்கின்றார். அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன், நீங்கள்தான் இப்போது அரசு. அதை லால் காந்த மாத்திரம் புரிந்து கொண்டார்.

நீதிமன்றத்தில் சொல்ல வேண்டிய விடயங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகத்தில் சொல்கின்றார். ஏதேனும் சம்பவம் நடந்தால், அதில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இன்று பொலிஸும்  அரசும் சேர்ந்து போலிச் சாட்சிகளை உருவாக்குகின்றார்கள்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...