Home தாயகச் செய்திகள் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான வழக்கு:ஓகஸ்ட் 28 ஆம் திகதி தீர்ப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான வழக்கு:ஓகஸ்ட் 28 ஆம் திகதி தீர்ப்பு!

Share
Share

யாழ். நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கானது தீர்ப்புக்காக இன்று திகதியிடப்பட்டிருந்தது.

சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் அந்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இருப்பினும் நீதிவான் இன்று விடுமுறையில் இருந்த காரணத்தால் வருகின்ற ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சிறிதரன் எம்பியின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனிடம் கையளிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...