யாழ். நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டுள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கானது தீர்ப்புக்காக இன்று திகதியிடப்பட்டிருந்தது.
சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் அந்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இருப்பினும் நீதிவான் இன்று விடுமுறையில் இருந்த காரணத்தால் வருகின்ற ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டுள்ளது.



Leave a comment