Share

அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீதிமன்றில் ஆஜரானதையடுத்துப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட குற்றத்துக்காக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை மீண்டும் அழைக்கப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார்.

இதனால் அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், நாமல் ராஜபக்ஷ நேற்று காலை திருமண நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மாலைதீவுக்குச் சென்றிருந்த மையால் இன்று மீண்டும் நாடு திரும்பி பிடியாணை உத்தரவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்து அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்துப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

OTP தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்ட போலி அழைப்புகள் மற்றும் செய்திகள்...

சாதாரண தரப் பெறுபேறு இன்றி உயர்தர தொழிற்கல்வியில் இணைய வாய்ப்பு!

2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. ...

யாழில் வாள்வெட்டுச் சம்பத்தில் ஒருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை ஓட்டோவில் வந்த மூவர் குழு வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது....

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!

அரியாலை மனிதப் புதைகுழிகளிலிருந்து நேற்றைய தினமும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம்...