Home தென்னிலங்கைச் செய்திகள் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
தென்னிலங்கைச் செய்திகள்

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

Share
Share

நாடாளுமன்றம் இன்றைய தினம் விசேட அமர்வுக்காக கூடுகிறது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11ஆவது பிரிவின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் நிதி உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நாடாளுமன்றம் கூடுகிறது என்று நாடாளுமன்ற பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகள் 16 இன் படி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரால் இன்று பாராளுமன்றம் கூட்டப்படுகிறது.

நாடாளுமன்றம் மீண்டும் ஜூலை 8, 9 மற்றும் 11 ஆகிய தினங்களில் கூடவுள்ளது என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழை எதிரணி கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சந்திரசேகர் கவலை!

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தமை தற்போதைய...

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், கைதியை விடுவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்...

காணி அபகரிப்புகள் இந்த அரசு மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் – சபையில் செல்வம் எம்.பி.!

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின்...