Home தென்னிலங்கைச் செய்திகள் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
தென்னிலங்கைச் செய்திகள்

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

Share
Share

நாடாளுமன்றம் இன்றைய தினம் விசேட அமர்வுக்காக கூடுகிறது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11ஆவது பிரிவின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் நிதி உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நாடாளுமன்றம் கூடுகிறது என்று நாடாளுமன்ற பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகள் 16 இன் படி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரால் இன்று பாராளுமன்றம் கூட்டப்படுகிறது.

நாடாளுமன்றம் மீண்டும் ஜூலை 8, 9 மற்றும் 11 ஆகிய தினங்களில் கூடவுள்ளது என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...

கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!

‘கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா...