Home தாயகச் செய்திகள் நல்லூர் வளாகத்துக்குள் நுழைந்த இராணுவ வாகனம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நல்லூர் வளாகத்துக்குள் நுழைந்த இராணுவ வாகனம்!

Share
Share

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்துக்குள் இராணுவ வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், விசனமும் வெளியிட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் ஆலய முகப்பு வீதியில் இராணுவ வாகனம் ஒன்று நுழைந்தது. இராணுவத்தினரின் இந்த செயலால் அங்கிருந்த பக்தர்கள் விசனமடைந்தனர்.

இதனிடையே, இராணுவத்தின் இந்த செயல்பாட்டுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதேசமயம், கடந்த ஆண்டு திருவிழாவின்போதும் பிக்கு ஒருவர் இராணுவ வாகனத்தில் ஆலய சுற்றாடல் பகுதிக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகல்!

கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகினர் என்று கல்வி,...

பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!

இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்பாம்பு தீண்டி உயிரிழந்தார். புத்தூர் மேற்கில்...

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்?

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராக உள்ளதாக வலி. தெற்கு...

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா? ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம் – மூதூர் நீதிமன்றம் இன்று தீர்மானம்!

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத்...