Home தாயகச் செய்திகள் நல்லூர் வளாகத்துக்குள் நுழைந்த இராணுவ வாகனம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நல்லூர் வளாகத்துக்குள் நுழைந்த இராணுவ வாகனம்!

Share
Share

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்துக்குள் இராணுவ வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், விசனமும் வெளியிட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் ஆலய முகப்பு வீதியில் இராணுவ வாகனம் ஒன்று நுழைந்தது. இராணுவத்தினரின் இந்த செயலால் அங்கிருந்த பக்தர்கள் விசனமடைந்தனர்.

இதனிடையே, இராணுவத்தின் இந்த செயல்பாட்டுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதேசமயம், கடந்த ஆண்டு திருவிழாவின்போதும் பிக்கு ஒருவர் இராணுவ வாகனத்தில் ஆலய சுற்றாடல் பகுதிக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சிறிதரன் எம்பியின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனிடம் கையளிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...