யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
சுன்னாகத்தைச் சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்ற பெண்ணொருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து குறித்த பெண் மீது மோதியதில் குறித்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
குறித்த பெண் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டவேளை தொடருந்து மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment