Home தென்னிலங்கைச் செய்திகள் தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!

Share
Share

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கட்சி உறுப்பினர்களிடம் இருந்து ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்குள் செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை.

ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்துக்குள் நுழையுமாறு மற்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.” – என்றார்.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வந்தால் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...