Home தாயகச் செய்திகள் தேர் கலசம் கழன்று வீழ்ந்ததில் முள்ளிவாய்க்காலில் பெண் மரணம்!
தாயகச் செய்திகள்

தேர் கலசம் கழன்று வீழ்ந்ததில் முள்ளிவாய்க்காலில் பெண் மரணம்!

Share
Share

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் தேரில் இருந்த கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் கலசம் மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதான சங்கரப்பிள்ளை சசிகலா என்ற பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் சென்று பார்வையிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...