Share

2022 ஆம் ஆண்டு கொழும்பு, காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், அப்போது பொலிஸ்மா அதிபராக இருந்த தேசபந்து தென்னக்கோன் தனது கடமைகளைச் செய்யத் தவறியமையால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவைக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சட்டதரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று காலை கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர பரிசீலித்தார்.

அதன்படி, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கோரிய முன் பிணை மனுவை நீதிவான் நிராகரித்தார்.

இந்நிலையிலேயே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...