Home தாயகச் செய்திகள் தெல்லிப்பளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவரை அடையாளம் காணுமாறு கோரிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தெல்லிப்பளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவரை அடையாளம் காணுமாறு கோரிக்கை!

Share
Share

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியிலிருந்து முதியவர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு மீட்கப்பட்ட குறித்த முதியவரின் உடலம், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த நிலையில் இந்த மரணத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்து, ஒருவர் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

அவர் வழங்கிய வாக்குமூலத்தில், நேற்றிரவு பட்டா ரக வாகனத்தை பின்பக்கமாகச் செலுத்தியபோது, குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், உடலம் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

எனவே குறித்த உடலத்தை இனங்காண உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...