Home தாயகச் செய்திகள் துப்பாக்கி ரவைகளுடன் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் உட்பட இருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

துப்பாக்கி ரவைகளுடன் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் உட்பட இருவர் கைது!

Share
Share

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பில் இருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம், துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது, நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி – 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5 ஆயிரத்து 600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதுடன், செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது!

சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து...

பலத்த பாதுகாப்புடன் நல்லூர் கந்தனை வழிபட்ட பிரதமர்! (படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில்...

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக நான்கு மனித என்புத்...

திருமலையில் இரு குழுக்களிடையே மோதல்; இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டு அங்கிருந்து வெளியேறிய...