Home தாயகச் செய்திகள் திருமலை முத்துநகர் விவசாயிகள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

திருமலை முத்துநகர் விவசாயிகள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம்!

Share
Share

திருகோணமலை, முத்துநகர் விவசாயிகள் இன்றும் இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“விவசாயிகளிடம் இருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு சத்தியாக்கிரகப்  போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நாளை திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவே இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்நிலையில், பொலிஸார் போராட்டக்காரர்களின் இடத்தை அகற்ற முற்பட்டபோதும் கூட அவர்களால் அதனை அகற்ற முடியவில்லை எனத்  தெரிவிக்கப்படுகின்றது.

சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாயக் காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...