Home தாயகச் செய்திகள் திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

Share
Share

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டது முதல் அவர் நேற்றிரவு வரை உணவு, தண்ணீர் அருந்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

கரையோர பாதுகாப்புத் திணைக்களம் பல இடங்களில் தனது சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திருகோணமலை கடற்கரைக்கு அருகில் உள்ள சம்புத்த
ஜயந்தி போதி ராஜ விகாரைக்கு மாத்திரம் தனது சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டியே அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரையோரமாக அவர் சட்டவிரோத கட்டுமானங்களை அமைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த கட்டுமானத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. இதன் மூலம் குழப்ப நிலை உருவானது. இதைத் தொடர்ந்து, குழப்பநிலைமையை உருவாக்கியமைக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் 11 பேருக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பௌத்த பிக்குகளும், 5 பொதுமக்களுமாக 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஏனைய இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

வடக்கில் 80 ஆயிரம் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன!

வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...