Home தென்னிலங்கைச் செய்திகள் திங்கள் மாலைதீவுபறக்கின்றார் அநுர!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

திங்கள் மாலைதீவுபறக்கின்றார் அநுர!

Share
Share

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைமறுதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்குச் செல்லவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் மாலைதீவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைகின்றது.

1965 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து 60 ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுவதால், இந்த உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்த பேச்சுவார்தையும் நடத்தப்படவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.”...

நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும்...

மேலதிக அரச அதிபர்கள் இருவர் மன்னார் மாவட்டத்துக்கு நியமனம்!

மன்னார் மாவட்டத்துக்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரச அதிபர்கள் நேற்று பொது...