Home தென்னிலங்கைச் செய்திகள் திங்கள் மாலைதீவுபறக்கின்றார் அநுர!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

திங்கள் மாலைதீவுபறக்கின்றார் அநுர!

Share
Share

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைமறுதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்குச் செல்லவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் மாலைதீவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைகின்றது.

1965 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து 60 ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுவதால், இந்த உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்த பேச்சுவார்தையும் நடத்தப்படவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...