Home தென்னிலங்கைச் செய்திகள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேணும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என்கிறது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேணும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என்கிறது அரசாங்கம்!

Share
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் வடக்கு மாகாணத்துக்கு பலமுறை விஜயம் செய்துள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு தான் நாங்கள் செயற்படுகிறோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை (18) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிகழ்வுகளை நடத்தி நாங்கள் வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை. காணி பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக நாங்கள் பயன்படுத்தவில்லை. காணிகளை விடுவிப்பதை நாங்கள் அரசியலாக்கவில்லை.

பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் கடந்த காலங்களில் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணிகளுக்காக பெற்றுக்கொண்ட காணிகளை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.இதற்கு நிகழ்வு நடத்த வேண்டிய அவசியமில்லை.

காணி விடுவிக்கப்படும் போது அரசாங்கம் அமைதியாக இருக்கும் போது ஒருசிலர் ‘தம்மால் தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துக்கொள்கிறார்கள்.

வடக்கு மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளை காட்டிலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

ஆகவே மக்களுக்கு நாங்கள் சேவையாற்றுவோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் வடக்கு மாகாணத்துக்கு பலமுறை விஜயம் செய்துள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு தான் நாங்கள் செயற்படுகிறோம் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...