Home தாயகச் செய்திகள் தட்டுவன்கொட்டியில் கண்ணிவெடி அகற்றும் பணியை மீண்டும் முன்னெடுக்குமாறு மக்கள் வேண்டுகோள்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தட்டுவன்கொட்டியில் கண்ணிவெடி அகற்றும் பணியை மீண்டும் முன்னெடுக்குமாறு மக்கள் வேண்டுகோள்!

Share
Share

கிளிநொச்சி – தட்டுவன்கொட்டி பகுதியில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டிப் பகுதியில் அண்மையில் வெடிபொருள்களைக் கையாண்ட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அத்துடன், மேலும் சில இடங்களிலும் வெடிபொருள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே, அங்கு மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“போரின் பின்னர் மீளக் குடியமர்த்தப்பட்டு கடந்த 15 வருடங்களாக நாங்கள் இங்கு வசித்து வருகின்றோம். இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்ணிவெடிகள் அவதானிக்கப்பட்டு, அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, பின்னர் அவை மீட்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாடுவதற்காக வெளியில் செல்லும்போதுகூட அச்சமான சூழலுக்குள்ளேயே அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த விடயத்தைக் கருத்திற்கொண்டு, தட்டுவன்கொட்டியில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.” – என்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...