Home தாயகச் செய்திகள் ஜேர்மனில் இருந்து விடுமுறைக்கு யாழ். வந்தவர்இளைஞர் ஒருவர் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல்
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜேர்மனில் இருந்து விடுமுறைக்கு யாழ். வந்தவர்இளைஞர் ஒருவர் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல்

Share
Share

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாகத் தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். மேற்படி நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை அவர், தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார்.

அவ்வேளை, ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவரின் நண்பர் அவ்வழியே சென்ற வேளை நிறை போதையில் இருந்த கும்பல் அந்த இளைஞரை வம்புக்கு இழுத்துத் தர்க்கம் புரிந்து, மண்வெட்டிப் பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரை அயலவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர் எனவும், அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்குச் செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்)...

வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து தடை!

வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை...

வைத்தியர் மகேஷி பிணையில் விடுவிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை...

யாழ். சிறைக் காவலாளியின் வீட்டின் மீதுஅதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்...