Home தென்னிலங்கைச் செய்திகள் ஜெனீவா பயணமானார் விஜித ஹேரத்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜெனீவா பயணமானார் விஜித ஹேரத்!

Share
Share

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை சுமார் 06.45 மணிக்கு ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாளை திங்கட்கிழமை (08) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான சிறப்பு சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது.

வோல்கர் டர்க், இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்து நடைபெறும் இந்த மாநாடு, மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும்.

இந்த ஆண்டு மனித உரிமைகள் அமர்வில் அமைச்சர் விஜித ஹேரத்துடன் கூடுதலாக, வெளியுறவு அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பெரும்பாலான கைதுகள் அரசியல் கண்காட்சிகள் என்கிறது ஐ.தே.க!

நாட்டில் நடைபெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே நடக்கின்றன. கைதாகும் 100 பேரில் 98 பேர்...

இந்த ஆண்டில் 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை – ஜனாதிபதி!

இந்த ஆண்டு புதிதாக 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முற்பகல்...

வங்கிகள் மூலம் மோசடி; மக்களுக்கு எச்சரிக்கை!

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக, தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக...