Home தென்னிலங்கைச் செய்திகள் செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சுக்கே அதிக நிதி – பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 455 பில்லியன்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சுக்கே அதிக நிதி – பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 455 பில்லியன்!

Share
Share

தேசிய மக்கள் சக்தி அரசின், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், உச்சபட்சமாக நிதி அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வரைவு நாடாளுமன்றத்தில் பதில் நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், 2026ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் அரசின் ஒட்டுமொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அமைப்பின் படி, 634 பில்லியன் ரூபா நிதி நிதியமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத்திட்டத்தில் ஒரு துறைக்கு அல்லது அமைச்சு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதியாக இது பதிவாகியுள்ளது.

நிதி அமைச்சுக்கு அடுத்தபடியாக உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பொதுநிர்வாக அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது இரண்டாவது வாசிப்பாகக் கருதப்படும்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறும்.

14ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி நடைபெறும்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குறித்த...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...