Home தாயகச் செய்திகள் செம்மணி வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணி வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு!

Share
Share

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. 

கடந்த வழக்குத் தவணையின்போது மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்கான பட்ஜட்டை சமர்ப்பிக்குமாறும், நிபுணர்களின் இடைக்கால அறிக்கையையும் நீதவான் கோரியிருந்தார். 

இந்த விடயங்கள் எதிர்வரும் வழக்குத் தவணையின்போது முன்வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

அத்துடன், இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறும் முதலாவது நீதிமன்ற நடவடிக்கை என்பதாலும், எதிர்வரும் வழக்குத் தவணையில் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...