Home தாயகச் செய்திகள் செம்மணி புதைகுழி; 33 எலும்புக் கூடுகள் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணி புதைகுழி; 33 எலும்புக் கூடுகள் மீட்பு!

Share
Share

செம்மணி மனித புதைகுழியில், நேற்று (29) மாலை வரையான காலப்பகுதியில் 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து நீலநிற பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. 

இன்றைய அகழ்வு பணிகளின் போது மேலும் , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் வரையில் 33 மனித  எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 மனித  எலும்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...