Home தென்னிலங்கைச் செய்திகள் செம்மணியில் 240 ஐத்தொட்ட எலும்புக்கூடுகள்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணியில் 240 ஐத்தொட்ட எலும்புக்கூடுகள்!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப்  பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாள்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 44 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது புதிதாக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

அதற்கமைய இதுவரையில் 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 235 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...