Home தாயகச் செய்திகள் செம்மணியில் மனிதப் புதைகுழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் மனிதப் புதைகுழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

Share
Share

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருள்களைக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சிறிய பரல் ஒன்று குண்டு செயலிழக்கும் பிரவினரால் மீட்கப்பட்டுள்ளது. அது ஏ.கே. அல்லது எல்.எம்.ஜி.ரக இயந்திரத் துப்பாக்கிக்குப் பய்ன்படுத்தப்படும் ட்ரம் மகஸின் (ரவைக் கூடு) எனச் சம்பந்தப்பட்ட தரப்புகளால் அடையாளம் காணப்பட்டது என அறியவந்தது.

ஆயினும் அந்த ட்ரம் மகஸினுக்குள் ரவைகள் நிரப்பப்பட்டிருந்தனவா அல்லது அது வெற்று மகஸினா என்பது தெரியவரவில்லை.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஒன்பதாம் நாளான நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலையில் புதைகுழியில் இருந்து சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அதிகாலை குண்டு செயலிழக்கும் பிரிவினர் வருகை தந்து அந்தச் சந்தேகத்துக்கிடமான பொருளை அகழ்ந்தெடுத்தனர். பின்னர் அது நீதிமன்றக் கட்டுக்காவலில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

ஆய்வின் பிற்பாடு அது தொடர்பான தகவல்கள் உறுதிப்பாடாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

சுண்டிக்குளத்தில் இரகசியமான முறையில் காணி அளவீடு!

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் ஜே/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால்...

மட்டக்களப்பில் வாவியில் மூழ்கி சிறார்கள் மூவர் பலி!

மட்டக்களப்பு, வாகரை – பனிச்சங்கேணி வாவியில் மூழ்கி, மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.  கருவப்பஞ்சேனை பகுதியைச் சேர்ந்த...