Home தாயகச் செய்திகள் செம்மணியில் இன்று மேலும் இரு சிறுவர்களின் என்புத் தொகுதிகள்! – 4 மண்டையோடுகளும் அடையாளம் காணப்பட்டன!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் இன்று மேலும் இரு சிறுவர்களின் என்புத் தொகுதிகள்! – 4 மண்டையோடுகளும் அடையாளம் காணப்பட்டன!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் எட்டாம் நாள் அகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் நான்கு மண்டையோடுகளும் இனங்காணப்பட்டுள்ளன. அதில் ஒன்று நேற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவற்றை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 34 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான ஞா.ரனித்தா, வி.கே.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யாழ்....

வவுனியாவில் வீதியோர வியாபார நிலையங்கள்மாநகர சபையால் அதிரடியாக அகற்றல்!

வவுனியா மாநகர சபையால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையங்கள் அகற்றப்பட்ட போது அந்தப் பகுதியில் வீதியோர...

தங்க முலாம் பூசிய துப்பாக்கி விவகாரம்; துமிந்த திஸாநாயக்கவுக்கு பிணை!

கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி...

கொக்குத்தொடுவாய் புதைகுழி; பகுப்பாய்வு விபரங்கள் வெளியாகின!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர்...