Home தென்னிலங்கைச் செய்திகள் சூடுபிடிக்கும் அரசியல் களம் – ரணிலையும் சந்தித்துப் பேசிய சீனத் தூதுவர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சூடுபிடிக்கும் அரசியல் களம் – ரணிலையும் சந்தித்துப் பேசிய சீனத் தூதுவர்!

Share
Share

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சீனத் தூதுவரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலுமான அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள அரச  இல்லத்தில் இருந்து நேற்று வெளியேறுவதற்கு முன்னர், அவருடன் சீனத் தூதுவருடன் இது போன்ற ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

மேலும், மற்றொரு உயர்மட்ட முன்னாள் அரசியல்வாதியுடனும் சீனத் தூதுவர் எதிர்காலத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...