Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி புதைகுழி; மேலும் 05 மனித எச்சங்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி புதைகுழி; மேலும் 05 மனித எச்சங்கள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணம் – சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாவது அமர்வில், மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெற்றன.

புதிதாக 05 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் 20 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் இரண்டு மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக இதுவரையில் 85 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் 67 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், உடைந்த காப்பு உள்ளிட்ட சில சான்று பொருட்களும் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...