Home தாயகச் செய்திகள் சித்துபாத்தியில் இன்றும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தியில் இன்றும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!

Share
Share

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றும் 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதுவரை 37 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் குறித்த புதைகுழியில் இருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 30 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியை அண்மித்த பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மேற்பார்வையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவர்கள் இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் பங்கு; றீகனுக்கு கடிதம் அனுப்பினார்!?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பாரதீய...

பாடசாலை இடை விலகலில் வடக்கில் ஆண்களே அதிகம் – ஆளுநர் கவலை!

வடக்கு மாகாண பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர்என்று ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். தேசிய...

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும்! – ராஜிதவின் மகன் தெரிவிப்பு! 

“எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர்...

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – ராஜிதவின் மகனுக்கு அமைச்சர் சமந்த பதில்!

“எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள்....