Home தாயகச் செய்திகள் சித்துபாத்தியில் இன்றும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தியில் இன்றும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!

Share
Share

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றும் 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதுவரை 37 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் குறித்த புதைகுழியில் இருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 30 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியை அண்மித்த பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மேற்பார்வையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவர்கள் இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...