Home தாயகச் செய்திகள் சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு!

Share
Share

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் அம்பாறை – கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்கக் குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டைக் கண்டுபிடித்தனர்.

அவர்கள், 119 எனும் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டைப் பார்வையிட்டனர்.

குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்த சம்மாந்துறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியாண்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று...

ஜனாதிபதியைச் சந்தித்தபுதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...

மின்சாரசபையின் பொறியியலாளர்களில் 20 வீதமானோர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு!

இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியியலாளர்களில் 20% பேர் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து,...