Home தாயகச் செய்திகள் கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!

Share
Share

உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது
44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கோண்டாவில் டிப்போவில் பஸ் நடத்துநராக பணிபுரிந்து வருகின்றார்.

நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இவர் கோண்டாவில் பகுதியில், பணி நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று மதிய உணவுக்காக சைக்கிளில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்டவேளைவீதியால் வந்த வான் அவர் மீது மோதியதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணை களை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

தேடப்பட்டுவரும் செவ்வந்தியின் தாய் சிறையில் மரணம்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின்...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!

தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...

கூமாங்குளத்தில் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவு!

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு உயிரிழந்த பொதுமகனின் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு நீதவான்...