கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நாட்கள் எடுக்க வேண்டியிருந்தது என்றும் இறக்குமதி கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம் எனவும் மேலதிக சுங்கப் பணிப்பாளரும் சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
ஒரு நாளில் சுமார் 1,200 இறக்குமதி கொள்கலன்கள் வந்த நிலையில், சில நாட்களில் இது 2 ஆயிரத்து 900ஆக உயர்ந்தது. இதனால், இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்க வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும், இன்று (நேற்று) காலை நிலவரப்படி இந்த தாமதம் முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய அனைத்து கொள்கலன்களும் சுங்கத்தால் அனுமதிக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
Leave a comment