Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படைக் கப்பல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படைக் கப்பல்!

Share
Share

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SATPURA’ எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 403 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நேற்று (20) நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்த போர்க் கப்பலான ‘‘INS SATPURA’ 142.5 மீற்றர் நீளமுடையது என தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில் அதன் பணியாளர்களை இலங்கையின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...