Home தென்னிலங்கைச் செய்திகள் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நாமலுக்கு எதிராக முறைப்பாடு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நாமலுக்கு எதிராக முறைப்பாடு!

Share
Share

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொலைத் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறும் தவறான சமூக ஊடக செய்திக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவினால் இன்று (21) காலை இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. 

யூடியூப் செய்தி தளமொன்றின் மூலம் இவ்வாறான தவறான கூற்றுகள் பரப்பப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் அதிகாரத்திற்கு வர உதவும் வகையில், பாதாள உலக தொடர்புகளைப் பயன்படுத்தி, தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஒருவரைக் கொல்ல நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சதி செய்வதாக யூடியூப் செய்தி தளம் குற்றம்சாட்டியுள்ளது. 

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...