Home தென்னிலங்கைச் செய்திகள் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நாமலுக்கு எதிராக முறைப்பாடு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நாமலுக்கு எதிராக முறைப்பாடு!

Share
Share

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொலைத் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறும் தவறான சமூக ஊடக செய்திக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவினால் இன்று (21) காலை இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. 

யூடியூப் செய்தி தளமொன்றின் மூலம் இவ்வாறான தவறான கூற்றுகள் பரப்பப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் அதிகாரத்திற்கு வர உதவும் வகையில், பாதாள உலக தொடர்புகளைப் பயன்படுத்தி, தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஒருவரைக் கொல்ல நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சதி செய்வதாக யூடியூப் செய்தி தளம் குற்றம்சாட்டியுள்ளது. 

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை – தமிழரசுக் கட்சி அறிக்கை!

“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை....

ஐ. நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகுகிறது இலங்கை?!

இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் பிரச்னைகள் தொடர்பில் ஒரு பொறிமுறையை கோரி, பிரிட்டன் தலைமையிலான நாடுகளின்...

வெலிகந்தையில் கராஜில் இருந்துநாற்பது தோட்டாக்கள் கைப்பற்றல்!

பொலனறுவை, வெலிகந்தை, நாமல்கம பகுதியில் உள்ள வீடொன்றின் கராஜுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மில்லிமீற்றர் ரக...

செம்மணி வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில்...