Home தாயகச் செய்திகள் கொலை அச்சுறுத்தல்; கிளிநொச்சியில் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகால கடூழியச் சிறை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொலை அச்சுறுத்தல்; கிளிநொச்சியில் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகால கடூழியச் சிறை!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, கொள்ளைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபருக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து
தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 08ஆம் திகதி, நபரொருவர் ஓட்டோ சாரதியை கத்திமுனையில் அச்சுறுத்தி அவருடைய ஓட்டோவை கடத்தியிருந்தார்.

அத்துடன், பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்தது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஓட்டோவால் மோதி படுகாயங்களையும் ஏற்படுத்தியிருந்தார்.

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கு கிளிநொச்சி மேல் நீதி மன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு கிளிநொச்சி மேல்
நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், நேற்று தீர்ப்புக்காக
எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 03 லட்சத்து 50 ஆயிரம் ரூபா இழப்பீடும், மற்றையவருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடும் செலுத்த வேண்டும். தவறினால்
முறையே, ஒரு வருட சிறைத் தண்டனையும், இரண்டு வருடகால சிறைத்தண்டனையையும் கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரிட்டன் துணைப்பிரதமரை தமிழ்த் தரப்புக்கள் சந்திக்கின்றன!

பிரிட்டன் துணைப் பிரதமரான டேவிட் லம்மி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு...

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பைத் தயாரிப்பதாக யாழில் தமிழ்ப் பிரதிநிதிகள் நேற்றுக் கூடித் தீர்மானம்!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட் பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன்...

அல்லைப்பிட்டிக் கொலை; சிறுவனின் உறவினர்கள் சடலத்துடன் வீதியில் போராட்டம்!

யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் சடலத்துடன், உறவினர்கள் வீதியில் இறங்கிப்...

குமாரபுரம் படுகொலை; நினைவேந்தல்!

திருகோணமலை – குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் நினைவுகூரப்பட்டது. திருகோணமலை – மூதூர் –...