Home தாயகச் செய்திகள் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; வழக்கு ஒத்திவைப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; வழக்கு ஒத்திவைப்பு!

Share
Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்காக நவம்பர் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதிவான் த. பிரதீபன் முன்னிலையில் நடந்த வழக்கு விசாரணையின்போது, புதைகுழியில் இருந்து மீட்கப் பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் காணாமல் போனோர் பணிமனையால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் கோரப்பட்டது.

இதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் 6 ஆம் திகதிக்கு நீதிவானால் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னணி கொக்குத்தொடுவாய் மனித புதை குழி 2023 ஜீ_ன் மாதம் 29ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது. குடிதண்ணீர் விநியோகத்துக்காக குழாய் பொருத்துவதற்காக கிடங்கு வெட்டிய போது இந்தப் புதைகுழி வெளிப்பட்டது.

ஜூலை 6ஆம் திகதி அகழ்வு பணிகள் ஆரம்பமாகின. 52 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணி நிறைவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...