Home தாயகச் செய்திகள் குற்றப்புலனாய்வுத் துறையை பின்தொடர்ந்த கடற்படைப் புலனாய்வு – நீதிமன்றில் முறைப்பாடு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குற்றப்புலனாய்வுத் துறையை பின்தொடர்ந்த கடற்படைப் புலனாய்வு – நீதிமன்றில் முறைப்பாடு!

Share
Share

யாழ்.பருத்தித்துறையில் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் காணாமல்போனவர் தொடர்புடைய ஒரு விடயத்தை விசாரிக்க தங்கள் அதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நபர்கள் நால்வர், அவர்களைப் பின் தொடர்ந்ததாகவும் அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில்
அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை செய்த
போது குற்றப் புலனாய்வுப்பிரிவினரை பின் தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கொமாண்டர்உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறை
அதிகாரிகளிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை வருகின்றார் ஆஸி. ஆளுநர் நாயகம் – ஜனாதிபதி, பிரதமரைச் சந்திப்பார்!

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்...

சட்டச் சிக்கல் நீக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை – தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவிப்பு!

“மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக அரசமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டிருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரேரணை...

அமெரிக்க வாகனங்களை வரி இல்லாது இறக்குமதி செய்யுமா இலங்கை?

வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் தமது மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத...