Home தென்னிலங்கைச் செய்திகள் குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

Share
Share

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குருநாகல் – நாரம்மல லஹிட்டியாவ, ஹொரம்பாவ – மாவி எல வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி தொலைத்தொடர்பு கம்பத்துடன்
மோதி கவிழந்து விபத்துக்குள்ளாது.

இதன்போது, லொறியின் பின்புறத்தில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்த லொறியின் கீழ் அகப்பட்டனர்.

லொறியில் நசியுண்டு, படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக நாரம்மல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் இருவரும் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த 26, 29 வயதுடையவர்களாவர்.

இந்த லொறியில் ஐவர் பயணித்திருந்தனர். லொறியின் சாரதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த 49 வயதான நபர் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...