Home தாயகச் செய்திகள் கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

Share
Share

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவர் தனது இரவு நேரக் கடமையை முடித்துக் கொண்டு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், மருதமுனை மக்கள் மண்டபம் முன்பாக நேர் எதிரே வந்த இ.போ.ச. பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானபோது அதே இடத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபையில் காவலாளியாக நிரந்தர நியமனம் பெற்ற டேவிட் பாஸ்கரன், சுமார் 24 வருட சேவையைப் பூர்த்தி செய்துள்ளார். கடமையில் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு மிக்கவராகக் காணப்பட்ட இவர் கல்முனை மாநகர சபையின் சிறந்த ஊழியர் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...