Home தென்னிலங்கைச் செய்திகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை சிக்கினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை சிக்கினார்!

Share
Share

சுமார் 10 கிலோகிராமுக்கும் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க  விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை பயணிகள் வருகை முனையத்தின் ஊடக வெளியேற முற்பட்ட சந்தேகத்துக்கிடமான  பயணி ஒருவரைச் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அந்த நபரின் பயணப் பொதியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ 750 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தினுடாகச் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

கைதான நபர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விமான நிலையப் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...