Home தென்னிலங்கைச் செய்திகள் ஒக்டோபரில் ‘பட்ஜட்’ வரைவு; நவம்பரில் விவாதம் ஆரம்பம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒக்டோபரில் ‘பட்ஜட்’ வரைவு; நவம்பரில் விவாதம் ஆரம்பம்!

Share
Share

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு வரைவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நவம்பரில் நடத்துவதற்கும், டிசம்பரில் இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது தேசிய கொள்கைச் சட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பை (வரவு செலவுத்திட்ட உரையை) 2025 நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கும், மூன்றாம் வாசிப்புத் தொடர்பான வரவு – செலவுத் திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தக் கூடிய வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...