Home தென்னிலங்கைச் செய்திகள் ஐ.நா பேரவையின் அறிக்கையை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ.நா பேரவையின் அறிக்கையை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்!

Share
Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.

இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இந்தத் தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்தைத் தாம் தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், அமைய வேண்டும் என்றும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விபரித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

33 அரச நிறுவனங்களை மூடுகிறது அரசாங்கம்?

நட்டமடைந்துவருவதாக 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை....

வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! ஆனால் உள்ளகப் பொறிமுறையின் பொறுப்பாளராக சர்வதேசம் இருக்கவே முடியாது என்கின்றார் பிரதமர்!

“பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல....

செம்மணியில் இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! (படங்கள்)

யாழ்ப்பாணம், செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி...

ராஜபக்ஷக்களின் கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என்கிறார் நாமல்!

“ராஜபக்ஷக்களின் கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குத் துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷக்கள் மீது சுமத்த...