ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.
இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்தத் தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்தைத் தாம் தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், அமைய வேண்டும் என்றும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விபரித்துள்ளது.
Leave a comment