Home தென்னிலங்கைச் செய்திகள் எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை! – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை! – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

Share
Share

“நாட்டில் இன்று பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி உரிய வகையில் நிறைவேற்றி வருகின்றார். அனைத்து உறுதிமொழிகளையும் 24 மணிநேரத்துக்குள் நிறைவேற்றிவிட முடியாது. கட்டம் கட்டமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புரிந்துணர்வு மக்களுக்கு உள்ளது.

அரசின் பயணம் மிகச் சிறப்பாகவே சென்றுகொண்டிருக்கின்றது. ஆனால், எதிரணிகள்தான் வங்குரோத்து அடைந்துள்ளன. இன்று பலமான எதிரணி என்று ஒன்றும் இல்லை. அதனால்தான், அரசுக்கு எதிராகப் போலிப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.

மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனைவியை வாளால் வெட்டிபடுகொலை செய்த கணவன்!

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை...

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்: பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட  முன்னாள்  அரச...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து  நடத்திய சோதனையின்போது...

வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க நடவடிக்கை!

ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக்குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60...