Home தென்னிலங்கைச் செய்திகள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; விசாரணைத் தகவல்களை வெளியிடக்கூடாது – நீதி அமைச்சர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; விசாரணைத் தகவல்களை வெளியிடக்கூடாது – நீதி அமைச்சர்!

Share
Share

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணை தொடர்பில் எந்தவித தகவல்களும் வெளியிடப்படக்கூடாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால், அது தொடர்பான தகவல்களை வெளியிடுவது, விசாரணைக்கு பாதகமாக அமையும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, குறித்த விசாரணை தொடர்பாக தகவல்களை வெளியிடுவது தொடர்பில் நாடாளுமன்றமும் உத்தரவுகளை வழங்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரியபோதே, நீதி அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தகவல்களை பகிரங்கப்படுத்துவதால், விசாரணைகள் சீர்குலையக்கூடும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...