‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார். இதில் அவர் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன’, – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது.
அத்துடன், விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ‘தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் குறைபாடுகள், அலட்சியம் குறித்தும்
தற்போது முறையான விசாரணை நடைபெறுகிறது.
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன’, என்று தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Leave a comment