Home தென்னிலங்கைச் செய்திகள் உயர் பதவிகளில் உள்ள 488 பேர் தொடர்பில் விசாரணை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உயர் பதவிகளில் உள்ள 488 பேர் தொடர்பில் விசாரணை!

Share
Share

உயர் பதவியில் உள்ளவர்களின் 488 கோப்புக்கள் தொடர்பான விசாரணைளை இலஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் மூத்த அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் நபர்கள் தொடர்பான
488 கோப்புக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளை தொடங்கியுள்ளது.

இந்த முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகம், பல்வேறு அமைச்சுகள் மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேரடியாகப் பெறப்பட்டதாகத் தெரியவருகின்றது.

அவற்றில் சிலவற்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியும் பெறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணைகளுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூத்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம்...

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்!

நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை...