Home தென்னிலங்கைச் செய்திகள் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணை!
தென்னிலங்கைச் செய்திகள்

உயர் அதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணை!

Share
Share

பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சு செயலாளர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவை நடத்துகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து அரச அதிகாரிகள் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் இந்த அதிகாரிகளை நாட்டுக்கு அழைத்து வரவோ அல்லது கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊழல் மற்றும் முறைகேடுகளை செய்வதற்கு அரசியல்வாதிகளுக்கு உதவினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இந்த பொது அதிகாரிகள் அந்த முறைகேடுகளால் பயனடைந்தனர் என்று விசாரணைக் குழுக்கள் கூறுகின்றன.

பல அதிகாரிகள் பல இலட்சம்  ரூபாய் மதிப்புள்ள நிலம், வாகனங்கள், பிற சொத்துகளை வாங்கியமை பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. புலனாய்வுக் குழுக்கள் தற்போது இந்த அதிகாரிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றன.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் சொத்துகள் குறித்தும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...