Home தாயகச் செய்திகள் உடையார்கட்டு விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

உடையார்கட்டு விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்!

Share
Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப்  பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றின் செலுத்துநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இன்னொருவர் காயமடைந்து தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பெரும்பாலான கைதுகள் அரசியல் கண்காட்சிகள் என்கிறது ஐ.தே.க!

நாட்டில் நடைபெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே நடக்கின்றன. கைதாகும் 100 பேரில் 98 பேர்...

தையிட்டியில் போராட்டம்!

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையைஅகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி...

இந்த ஆண்டில் 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை – ஜனாதிபதி!

இந்த ஆண்டு புதிதாக 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் மரணம்!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இரவு கடுகதி ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று...