இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது.
அதன்படி, இலங்கை இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறும்.
இதன் மூலம் இதுவரை வழங்கப்பட்ட மொத்த IMF நிதி உதவி சுமார் 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை மதிப்பிடுவதற்காக IMF இன் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை கூடியது.
48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் நான்காவது மதிப்பாய்வை IMF நிர்வாகக் குழு நிறைவு செய்ததாக இலங்கைக்கான IMF திட்டத்தின் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ இதன்போது உறுதிப்படுத்தினார்.
Leave a comment