Home தென்னிலங்கைச் செய்திகள் இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு: மூன்று சந்தேகநபர்கள் சிக்கினார்கள்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு: மூன்று சந்தேகநபர்கள் சிக்கினார்கள்!

Share
Share

இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த வீதிப் பகுதியில் 24.06.2025 அன்று இடம்பெற்ற இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு தொடர்பாக  தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டபோதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பனவும்  மீட்கப்பட்டுள்ளன என்றும்  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...